கோயமுத்தூர்: ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவக் உடைய உடல் உறுப்புகள்தானம்

கோயமுத்தூர்: ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவக் உடைய உடல் உறுப்புகள்தானம்

Share it if you like it

வைத்தீஸ்வரன், அமிர்த வித்யாலயம் எட்டிமடை யில் 12ஆம் வகுப்பு படித்த வந்த நிலையில் கோவில்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்
கடந்த 02.11.2020 அன்று மாலை பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் கிராமத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்பொழுது எதிரே வந்த வேகமான காரில் விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 05.11.2020 (வியாழக்கிழமை) மாலை மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் செல்வன் வைத்தீஸ்வரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க தாய் தந்தையரால் முடிவு செய்யப்பட்ட நிலையில், அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படுகிறது.

மேலும் இவர் சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து எட்டிமடை கிராம வளர்ச்சிக்காகவும் ஆன்மீக பணிகளிலும் பெருமளவில் ஈடுபட்டு வந்தார். தற்போது #ஆர்எஸ்எஸ் ஸின் எட்டிமடை மண்டல் மண்டல் உடற்பயிற்சி பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it