பாகிஸ்தான் மீது ஐ.நா.வில் புகார்

பாகிஸ்தான் மீது ஐ.நா.வில் புகார்

Share it if you like it

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பில், ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது சஜத் ராஜா அவர்கள், பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

அவர் கூறியதாவது: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களை, பாகிஸ்தான் அரசாங்கம் விலங்குகள் போல நடத்துகின்றது என்றும், சொந்த நாட்டில் மக்கள் அடிமைகள் போல நடத்தப் படுகிறார்கள் என்றும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய உலக சிந்தி அமைப்பின் பொதுச் செயலாளர் லகு லுகானா கூறியதாவது, பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளால், சிந்தி மக்கள் காணாமல் போவது, எப்போதும் நடந்து வருகின்றது என்றும், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 60 பேர் கடத்தப்பட்டு உள்ளனர் என்றும், பயங்கரவாதத்தை பரப்பும் ஆபத்தான ஆயுதமாக அவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள் எனவும், குற்றம் சாட்டினார்.


Share it if you like it