மும்மொழி கல்வி கொள்கைக்கு பெருகும் ஆதரவு…! மக்கள் செல்வாக்கை இழக்கிறதா திராவிட கட்சிகள்?

மும்மொழி கல்வி கொள்கைக்கு பெருகும் ஆதரவு…! மக்கள் செல்வாக்கை இழக்கிறதா திராவிட கட்சிகள்?

Share it if you like it

புதிய கல்விக் கொள்கைக்கு சில திரை நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதில் அரசியல்வாதிகள் தலையீடுவது வெட்க கேடான செயல். நிச்சயம் மும்மொழி கல்வி கொள்கை வேண்டும் என்று மக்கள் உட்பட நெட்டிசன்கள் கறுத்து தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் எழுப்பி இருக்கும் கேள்விகள்….

  • மும்மொழி கல்வி கொள்கையை எதிர்க்கும் நபர்கள் தங்களின் குழந்தைகள், பேரகுழந்தைகள், எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்று கூற முன்வருவார்களா
  • ஏழை மாணவர்களுக்கு கிடைக்காத கல்வி தனியார் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க கூடாது என்று கூறுவார்களா
  • அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள், தாங்கள் நடத்தும் பள்ளியில் மும்மொழி கற்பிக்கப்படுவதை நிறுத்துவார்களா
  • ஏழை மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க இவர்கள் யார்.
  • ஏழைக்கு ஒரு வகை கல்வி, மத்திய வகுப்புக்கு ஒரு வகை கல்வி , பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி, மகா பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி …என்று வகை பிரித்து இங்கு கல்வி விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
  •  கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் (தமிழ் ஆசிரியர்) திரு. எடப்பாடி பழனிச்சாமி.
  • டெவலப்மென்ட், டெவலப்மென்ட், ஒன்லி டெவலப்மென்ட் (ஆங்கில ஆசிரியர்) திரு. ஸ்டாலின்.
  • நீர் குறையாமல் இருக்க தண்ணீரில் தர்மா கோல் மிதக்க விட்ட (அறிவியல் ஆசிரியர்) திரு. செல்லூர் ராஜீ. மேற்கூறிய நபர்கள் போன்று தமிழக மாணவர்கள் திகழ வேண்டுமா?
  •  மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா நிச்சயம் மும்மொழி கொள்கைக்கு தனது முழு ஆதரவை தெரிவித்து இருப்பார் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it