ஸ்டாலினுக்கு பா.ஜ.க சவால்..!

ஸ்டாலினுக்கு பா.ஜ.க சவால்..!

Share it if you like it

நெற்றியில் விபூதி வைத்துக்கொள்வது தமிழ் கலாச்சாரத்திக்கு எதிரானது என ஸ்டாலினால் கூறமுடியுமா? என பா.ஜ.க பொதுச்செயலாளர் P.முரளிதர ராவ், ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். திருவள்ளுவர் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பா.ஜ.க வை விமர்ச்சித்திருந்தார். அதற்க்கு பதிலடி கூறும் விதமாக பேசிய முரளிதர ராவ், ஸ்டாலினுக்கு துணிவிருந்தால் நெற்றில் விபூதி வைத்துக்கொள்வது தமிழர் கலாச்சாரம் இல்லையென கூறமுடியுமா? அவ்வாறு கூறினால் தமிழக மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள் என்றார். 

மேலும் அவர் கூறியதாவது திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவர் அல்ல அவர்கள் சொந்தம் கொண்டாட. அவர் அனைவருக்கும் பொதுவானவர், அவரின் பெருமைகளை குறைத்து சிறுவட்டத்தில் அடைக்க திமுக முயற்சிக்கிறது. ஆட்சி கட்டிலில் அமர திமுக தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிவருவதாக குற்றஞ்சாட்டினார்.


Share it if you like it