அதிகாரிகளை மிரட்டி ஆவணங்களை கிழித்து அவர்களை அடைத்து  வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அட்டூழியம் !

அதிகாரிகளை மிரட்டி ஆவணங்களை கிழித்து அவர்களை அடைத்து வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அட்டூழியம் !

Share it if you like it

  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்காக டெல்லிக்கு சென்று வந்தவர்கள் 8 பேர் அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள், வருவாய் துறையினர் என 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து நகரம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
  • இந்நிலையில் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக வந்ததாக நினைத்து அந்த அதிகாரிகளின் ஐடி கார்டுகளை பறித்தும், அவர்கள் கொண்டுவந்த ஆவணங்களை கிழித்து எறிந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த அதிகாரிகளை சிறை பிடித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த உடனேயே காவல் துறையினர் விரைந்து சென்று அவர்களை மீட்டனர். பின் அதில் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் அந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Share it if you like it