அனைத்து கட்சிக்கும் பாரதப் பிரதமர் மோடி திடீர் அழைப்பு…!

அனைத்து கட்சிக்கும் பாரதப் பிரதமர் மோடி திடீர் அழைப்பு…!

Share it if you like it

சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்தியா ராஜாங்க முறையில் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. திடீர் என்று நேற்று சீன ராணுவம் எல்லை ஒப்பந்தத்தையும் மீறி  நமது ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தினர். இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அதே சமயத்தில் இந்திய ராணுவம் கொடுத்த தக்க பதிலடியில் 43 சீன ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அடாவடி தனத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்தியர்களின் எண்ணமாக உள்ளது.

இந்நிலையில் பாரதப் பிரதமர் மோடி ஜூன் 19 மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.


Share it if you like it