அமைச்சரின் மிரட்டலுக்கு பயந்து முதல்வரிடம் உயிர் பிச்சை கேட்ட காதலன் சமூக நீதி பேசும் காவலர்கள் எங்கே?

அமைச்சரின் மிரட்டலுக்கு பயந்து முதல்வரிடம் உயிர் பிச்சை கேட்ட காதலன் சமூக நீதி பேசும் காவலர்கள் எங்கே?

Share it if you like it

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகளின் காதலன் தமிழக முதல்வரிடம் உயிர் பிச்சை கேட்டு உருக்கமாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு அமைச்சர் சேகர் பாபு தான் காரணம் என்று அக்காணொளியில் அவர் தெரிவித்து உள்ளார்.

இது பெரியார் மண் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருமா, சுந்தரவள்ளி, வைகோ, போன்றவர்கள் தனது உயிருக்கு அஞ்சி காணொளியை வெளியிட்ட நபருக்கு ஆதரவாக இன்று வரை குரல் கொடுக்காமல் கள்ள மெளனம் காத்து வருவது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். காதலர்களை பிரிக்க கூடாது அவர்களை உடனே சேர்த்து வையுங்கள் என்று திருமா, சுந்தரவள்ளி, ஜோதிமணி, வைகோ, போன்றவர்கள் அமைச்சரிடம் எடுத்து கூறாமல் எங்கே? பதுங்கி கொண்டு இருக்கிறார்கள் இந்த சமூக நீதி பேசும் காவலர்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it