அயோத்தி தீர்ப்பின் மீது மறுஆய்வு – சமூகத்தில் பிளவையும் ஏற்படுத்தும் முயற்சி

அயோத்தி தீர்ப்பின் மீது மறுஆய்வு – சமூகத்தில் பிளவையும் ஏற்படுத்தும் முயற்சி

Share it if you like it

அயோத்தி தீர்ப்பின் மீது அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், ஜாமியத் உலமா இந்த் அமைப்பும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யும் முடிவுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதையொட்டி அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் கருத்து உரிமை இருக்கிறது. கோர்ட்டுகளை நாடுவதற்கு சுதந்திரம் உள்ளது. இருந்தாலும், அயோத்தி தீர்ப்பை பொறுத்தமட்டில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். மதித்து உள்ளனர். ஆனால் இந்த தீர்ப்புக்கு பின்னர் ஒற்றுமை பலப்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்றால் அது வருத்தம் அளிக்கிறது மேலும் அயோத்தி பிரச்சினை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் முடிவுக்கு வந்து விட்டது. முஸ்லிம் மக்களின் முக்கிய பிரச்சினை பாபர் மசூதி அல்ல; கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் சமத்துவம் பெறுவதுதான் முக்கியம்” என்று குறிப்பிட்டார்.

“அயோத்தி தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்வது என்ற அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், ஜாமியத் உலமா இந்த் அமைப்பும் முடிவு செய்திருப்பது, சமூகத்தில் பிளவு மற்றும் மோதல் சூழ்நிலையை உருவாக்குவதற்கான முயற்சிதான். இதை சமூகத்தின் எந்த பிரிவினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.இந்த எதிர்ப்பு குரல் தனிமைப்படுத்தப்பட்டது தான் , ஒட்டுமொத்த சமூகத்தின் குரல் அல்ல” என்று முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.


Share it if you like it