அயோத்தி தீர்ப்பு பின்னணியில் மோடி – இந்தியா கண்டனம்

அயோத்தி தீர்ப்பு பின்னணியில் மோடி – இந்தியா கண்டனம்

Share it if you like it

அயோத்தி தீர்ப்பை தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியதாகவும், அதில் இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கு தனது உன்னதமான பங்களிப்பை தந்த சுப்ரீம் கோர்ட்டு அமர்விற்கு பாராட்டு என பிரதமர் தெரிவித்திருந்ததாகவும் வங்காளதேச ஊடகங்களில் ஒரு செய்தி பரவியது.இது முற்றிலும் பொய்யான செய்தி என வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த பொய்ச்செய்தியை வெளியிட்டவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், “சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதே, இதுபோன்ற சக்திகளின் நோக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it