அயோத்தி தீர்ப்பை வரவேற்ற ஸ்டாலின்

அயோத்தி தீர்ப்பை வரவேற்ற ஸ்டாலின்

Share it if you like it

ஸ்டாலின் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக  திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீண்டநெடும் காலமாக இருந்து வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்வுகண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் சட்டஅமர்வே தீர்ப்பு வழங்கிய பின்னர் அதனை விருப்பு வெறுப்புக்கு உட்ப்படுத்தாமல் அதனைஅனைத்து தரப்பினரும் சமமான முறையில் ஏற்றுக்கொண்டு,  மதநல்லிணக்கத்தை  போற்றி நாட்டின் பன்முகத்தமைக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாமல், எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it