அயோத்தி-மீண்டும் பிரச்னையை கிளப்பிய முஸ்லீம் அமைப்பு

அயோத்தி-மீண்டும் பிரச்னையை கிளப்பிய முஸ்லீம் அமைப்பு

Share it if you like it

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உலமா இ ஹிந்த் அமைப்பு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது மேற்கூறிய அமைப்பு முதன் முதலாக மறு சீராய்வு செய்தது.
மூல மனுதாரர் சித்திக் என்பவரது மகன் மெளலானா செய்யது இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். மொத்தம் 217 பக்கங்கள் கொண்ட இந்த மனுவில் ஆவணங்களின்படி சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.


Share it if you like it