அயோத்தி வழக்கு ஓவர் டியூட்டி பார்க்கும் உச்ச நீதிமன்றம்

அயோத்தி வழக்கு ஓவர் டியூட்டி பார்க்கும் உச்ச நீதிமன்றம்

Share it if you like it

அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றம் தினசரி விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 28-வது நாளாக இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற அலுவல்கள் முடியும் 4 மணிக்கு பதிலாக கூடுதலாக ஒருமணி நேரம் அதாவது 5 மணி நேரம் இந்த வழக்கு விசாரணையை தொடர முடிவு செய்திருப்பதாக உச்ச நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினர்களிடமும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  அயோத்தி வழக்கில் நவம்பர் மாத நடுவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Share it if you like it