ஆன்மீக சொத்தை மீட்க போராடிய நபர்…! கும்பகோணத்தில் படுகொலை…!

ஆன்மீக சொத்தை மீட்க போராடிய நபர்…! கும்பகோணத்தில் படுகொலை…!

Share it if you like it

ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் ஆர்.எஸ்.எஸில் நீண்ட காலமாக மக்கள் பணியாற்றி வருபவர் கோபாலன். தஞ்சை நாச்சியார் கோவில் பகுதியில் வசித்து வரும் இவரை. நேற்று இரவு சில மர்ம நபர்கள் படுகொலை செய்து இருப்பது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்பு காவல்துறை குற்றவாளியை கைது செய்தனர். தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது திடுக்கிடும் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

கோவில் இடத்திற்கு சொந்தமான பகுதியில் கடைகளை அமைத்து கொண்டு நீண்ட காலமாக வாடகை தரமால் ஏமாற்றியவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கோபாலன். அடாவடியாக நடந்து கொண்ட வியாபாரிகளை கோவில் இடத்தை விட்டு உடனே காலி செய்யுமாறு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனை துளியும் ஏற்றுகொள்ளாத டைலர் சரவணன். கோபாலன் மீது கடும் ஆத்திரம் கொண்டு பயங்கர ஆயுதத்தால் கொடூரமாக வெட்டி கொன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it