ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி மீது இறை அடியார்கள் காவல்துறையில் புகார்…!

ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி மீது இறை அடியார்கள் காவல்துறையில் புகார்…!

Share it if you like it

ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களின் உணர்வுகளையும், தொடர்ந்து புண்படுத்தி பேசி வரும் நபர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி. அண்மையில் நீதிமன்றத்தையும், பாரதப் பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சரை மிகவும் இழிவாக பேசி இருந்தார். இன்று வரை தமிழக அரசு அவரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நீண்ட மெளனம் காத்து வருகிறது.

இந்நிலையில் இந்து முன்னணி தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளது.

திருஞானசம்பந்தரையும், தேவாரப் பதிகங்களையும், அவதூறாக இழிவுபடுத்திப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியைச் சார்ந்த சுந்தரவள்ளி  என்பவரை கைது செய்ய வலியுறுத்தி திருக்கோவில் ஓதுவாமூர்த்திகள் மற்றும் சிவனடியார்கள் சார்பில்நெல்லைமாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it