ஆயிரம் அம்பேத்கர் வந்தாலும் உங்களை திருத்த முடியாது !

ஆயிரம் அம்பேத்கர் வந்தாலும் உங்களை திருத்த முடியாது !

Share it if you like it

  • டெல்லியில் CAA வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் நேற்று அந்த போராட்டக்காரர்கள் பிரதமர் மோடியை காதலர் தினத்தை முன்னிட்டு மோடி இங்கு வந்தால் அவருக்கு காதலர் தின பரிசு வழங்கப்படும் என்று அருவருக்கத்தக்க வகையில் அநாகரிகமாக பேசியுள்ளனர்.
  • சிறுபான்மையினராக இருக்கும்போதே இஸ்லாமியர்கள் பிரதமரையே தரக்குறைவாக விமர்சிக்கவும், காவல்துறை அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தும் அளவிற்கு வந்துவிட்டார்கள். ஆனால் இன்றும் பெரும்பாலான இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் அங்கு வாழவே வழியில்லாமல் பலரும் வாழ்வா சாவா என தினம்தினம் நரக வேதனை அனுபவித்து வருகிறார்கள்.
  • மேலும் மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லை என்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா சொன்னால் நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
  • அந்த திட்டத்தை கொண்டு வந்ததிலிருந்து மோடியும் தான் பங்கேற்கும் எல்லா மேடையிலும் CAA வை பற்றிதான் பேசுகிறார். மோடியும் அமித்ஷாவும் இந்த திட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் 130 கோடி பேருக்கும் பாதிப்பு இல்லை என்றும் கூறிவிட்டார். மேலும் CAA தொடர்பான கருத்துக்கள் வீடியோக்களை NAMO என்கிற செயலி மூலமாக குறிப்பிட்டார். இவ்வளவு விளக்கம் அளித்தும் நம் இஸ்லாமிய சகோதர்களுக்கு புரியவில்லையென்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரே நேரில் வந்து சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் போலும்.

Share it if you like it