இதுவரை ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள முக்கிய பிரமுகர்கள் யார் யார்?

இதுவரை ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள முக்கிய பிரமுகர்கள் யார் யார்?

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காந்தி ஜி

“காந்திஜி… பிரிவினையின் துயரமான நாட்களில் டெல்லியில் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஒரு ஷாகாவைப் பார்வையிட்டார். ஷாகாவில் உள்ள ஸ்வயம்சேவர்களுடன் உரையாடினார். அந்த செய்தி செப்டம்பர் 27, 1947 தேதியிட்ட ஹரிஜனில் வெளியானது.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்பேத்கார்
 ஆர்.எஸ்.எஸ் உடன் முக்கிய பிரமுகர்கள்
பூனே வில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் மே மாதம் 1939ம் வருடம் அம்பேத்கார் கலந்து கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
ஜூலை 31, 2014 அன்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் நாக்பூரில் உள்ள ரேஷம்பாகில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி
ஜூன் 07, 2018 அன்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அசிம் பிரேம் ஜி
அக்டோபர் 05,2019 அன்று விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம் ஜி நாக்பூர், ரேஷம்பாக் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் இரண்டாவது தலைவர் குரு கோல்வால்கர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெயபிரகாஷ் நாராயணன்
இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர நிலை பிரகடனத்திற்கு முன்புவரை ஆர்.எஸ்.எஸ்-ஐ கடுமையாக விமர்சித்துவந்த ஜெயபிரகாஷ் நாராயணன் அவசர நிலை பிரகடனதின் போது ஆர்.எஸ்.எஸ் செய்த பணிகளை பார்த்து வியந்து பாராட்டியதோடு, தனது இறுதி நிமிடங்கள் வரை ஆர்.எஸ்.எஸ் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிதுன் சக்கரவர்த்தி
பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான மிதுன் சக்கரவர்த்தி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-இன் தலைமையகத்திற்கு வருகை புரிந்தார்.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரத்தன் டாடா

டிசம்பர் 28, 2016 அன்று தொழிலதிபர் ரத்தன் டாடா நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-இன் தலைமையகத்திற்கு வருகை புரிந்தார்.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவ் நாடார்

HCL நிறுவன தலைவர் சிவ் நாடார் அக்டோபர் 8, 2019 அன்று நாக்பூரில் உள்ள ரேஷம்பாகில் ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்திருந்த விஜய தசமி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாக்டர்.கிருஷ்ணஸ்வாமி
ஜூன் 16, 2019 புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணஸ்வாமி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


Share it if you like it