ஆளுங்கட்சி செய்யும் தவறை கண்டிக்காத காவல் துறை – நூதன முறையில் போராட்டம்

ஆளுங்கட்சி செய்யும் தவறை கண்டிக்காத காவல் துறை – நூதன முறையில் போராட்டம்

Share it if you like it

பழனியில் திமுக நிர்வாகியான மோகன பிரபு மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை, அதே பகுதியில் உள்ள சதாசிவம் என்பவர் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அப்போது சதாசிவத்திடம் திமுக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சதாசிவம் காவல் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறை மணல் அள்ளியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் மணல் அள்ளியதற்கு தகவல் கொடுத்த சதாசிவம் மீது திமுக பிரமுகரை தாக்கியதாக, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொய் வழக்கு பதிவிட்டுள்ளனர்.இதனால் அதிருப்தி அடைந்த சதாசிவம் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையை கண்டித்து செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share it if you like it