இது தாங்க மோடி..! பாகிஸ்தான் சமூக ஆர்வலர் பிரதமருக்கு புகழாரம்!

இது தாங்க மோடி..! பாகிஸ்தான் சமூக ஆர்வலர் பிரதமருக்கு புகழாரம்!

Share it if you like it

சிறுபான்மை மக்கள் மற்றும் உண்மைக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வர கூடியவர் பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா. சி.ஏ.ஏ.விற்கு எதிராக ஹிந்துக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டவர். அதுமட்டுமில்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத மாதா சிலையை கிறிஸ்துவ மிஷநரிகளின் தூண்டுதல் பெயரில் காவல்துறை அவமதித்ததை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஆரிஃப் அஜாகியா இவ்வாறு கூறியுள்ளார்.

படம் 1 : இரண்டாவது முறையாக பிரதமர் ஆன, தேசிய சிந்தனை கொண்ட பிரதமரின் வீடு. பலர் இவரை ஒரு “சர்வாதிகாரி”, ஹிந்து மத ஆதரவாளர் என்று இடதுசாரிகள் அழைக்கிறார்கள்.

படம் 2: இது பொதுவுடைமைவாதியின் வீடு, ஏழைகளின் பங்காளன், என்று கூறுபவர். தொப்பி போல் நிறத்தை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள், பகுதி நேர முதல்வர், வாரிசு அரசியலின் முன்னோடி. என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it