இந்தியாவில் பகலிரவு டெஸ்ட்

இந்தியாவில் பகலிரவு டெஸ்ட்

Share it if you like it

இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது. இப்போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கிவைக்க உள்ளனர். இதற்காக இன்று காலை ஷேக் ஹசீனா கொல்கத்தா வந்தடைந்தார். பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிறபந்துகள் பயன்படுத்தப்படும், ஆட்டமானது மதியம் ஒருமணிக்கு ஆரம்பித்து இரவு எட்டுமணி வரை நடைபெறும். இந்தியாவில் முதல்முறையா பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Share it if you like it