இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

Share it if you like it

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கரிபீயன் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகின்றது. இன்று நடைபெற்ற முதலாவது இருபது ஓவர் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 

முதலில் விளையாடிய இந்திய அணி இருபது ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்திய அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் மட்மே எடுத்து தோல்வி அடைந்தது. இந்தியாவின் சார்பில் ஷாபாலி வர்மா 73 ரங்களும் ஸ்மிரிதி மந்தனா 67 ரங்களும் எடுத்தனர்.


Share it if you like it