இந்திய ராணுவம் மற்றும் பிரதமரை இழிவாக பேசிய அப்ரிடியை கதறவிட்ட-கெளதம் கம்பீர்!

இந்திய ராணுவம் மற்றும் பிரதமரை இழிவாக பேசிய அப்ரிடியை கதறவிட்ட-கெளதம் கம்பீர்!

Share it if you like it

அண்மையில் இந்திய பிரதமர் மோடி, ஜம்மூ-காஷ்மீர், மற்றும் இந்திய ராணுவத்தை மிகவும் இழிவாக பேசிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி. பேசிய காணொலி சமூக ஊடகங்களில் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.

அஃப்ரிடிக்கு எதிராக பேசினால், தங்கள் நட்பு கெட்டு போய்விடும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து மெளனம் சாதிக்கும் நிலையில். முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்பொழுதை பாஜக எம்.பியுமான கெளதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த 70 வருடமாக, காஷ்மீரை எங்களிடம் பிச்சை கேட்கும் இம்ரான் கான், அஃப்ரிடி, பஜ்வா, போன்ற ஜோக்கர்கள் இந்திய பிரதமருக்கு எதிராக விஷத்தை பரப்பலாம். பாகிஸ்தான் ஒரு நாளும், காஷ்மீரை பெற முடியாது பங்களாதேஷை நினைத்து பாருங்கள் என்று பதிலடி கொடுத்திருப்பதற்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it