இந்து தலைவர்களை கொல்ல  சதி – போலீசார் திடுக்கிடும் தகவல் !

இந்து தலைவர்களை கொல்ல சதி – போலீசார் திடுக்கிடும் தகவல் !

Share it if you like it

அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெங்களூரில் 3 பயங்கரவாதிகளை சென்னை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெங்களூரு, சாம்ராஜ்நகர், கோலாரில் பதுங்கி இருந்த மெகபூப் பாட்ஷா உள்பட 5 பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதானவர்கள் தென்னிந்தியாவில் இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்யவும், முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தவும் சதி திட்டம் தீட்டி இருந்ததும், சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மெகபூப் பாட்ஷா உள்பட 17 பயங்கரவாதிகள் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.


Share it if you like it