இந்து முன்னணி சுரேஷ்குமார் கொலை வழக்கு-3 பேர் துப்பாக்கிகளுடன் கைது!

இந்து முன்னணி சுரேஷ்குமார் கொலை வழக்கு-3 பேர் துப்பாக்கிகளுடன் கைது!

Share it if you like it

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கடந்த 2014-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சையது அகமது, அப்துல் சமீம், காஜாமொய்தீன் ஆகிய 3 பேரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.

அவர்கள் மூவரும் தலைமறைவாக இருந்து கொண்டு பயங்கரவாதிகள் துணையோடு, தமிழகத்தில் பெரிய தாக்குதலை நடத்தலாம் என்று போலீசார் சந்தேகம் கொண்டனர். எனவே அவர்கள் மூவரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் தேடிவந்தனர். அவர்களை பற்றி தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கடந்த வாரம் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள அந்த 3 பேருக்கும் உதவி செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு, பெங்களூருவில் வைத்து, முகமது அனீப்கான் (வயது 29), இம்ரான்கான் (32), முகமது சயீத் (24) ஆகிய மேலும் 3 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.


Share it if you like it