உச்சத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

உச்சத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

Share it if you like it

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தை அடைந்துள்ளன. சென்செக்ஸ் 413.45 புள்ளிகள் அதிகரித்து 41,405.65 புள்ளிகளிலும் நிஃப்டி 111.05 புள்ளிகள் அதிகரித்து 12,182.75 புள்ளிகளிலும்  வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டி ஆனது 12 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

டாடா ஸ்டீல் 4.38 விழுக்காடும், பராதி ஏர்டெல் 4.37 விழுக்காடும், வேதாந்தா 3.50 விழுக்காடும் பங்குகளின் மதிப்பு அதிகரித்தது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்றுவரும் நிலையில் இது பங்குசந்தையில் எதிரொலித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்தாலும் பங்குச்சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it