உயரும் மொபைல் கட்டணங்கள்

உயரும் மொபைல் கட்டணங்கள்

Share it if you like it

தொடர் நஷ்டத்தை தொடர்ந்து பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தங்களின் அலைபேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இது வரும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகின்றது. ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக இந்த ஆண்டின் இரண்டாம்காலாண்டில் 74 ஆயிரம்கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளன.

இந்திய தொலைத்தொடர்புத்துறையில் ஜியோவின் வருகைக்கு பின்னர் ஏர்செல், ரிலையன்ஸ், டாடா டொகமோ போன்ற பல்வேறு நிறுவங்கள் தங்களின் சேவையை நிறுத்திக்கொண்டன. இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் இவ்விவகாரத்தில் சரியான முடிவெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


Share it if you like it