உயர்ந்த ரூபாயின் மதிப்பு

உயர்ந்த ரூபாயின் மதிப்பு

Share it if you like it

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 33 காசுகள் அதிகரித்து 70.50 ரூபாய் என வர்த்தகமாகி வருகின்றது. ரூபாய் மதிப்பை போன்றே பங்குச்சந்தையும் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 250 புள்ளிகள் அதிகரித்து 40,825 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 66 புள்ளிகள் அதிகரித்து 12,038 புள்ளிகளிலும் விற்பனையாகி வருகின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. வேதாந்தா, டாடா ஸ்டீல், யெஸ் வங்கி ஆகிய நிறுவங்களின் பங்குகளின் மதிப்பு 3.78 விழுக்காடு அதிகரித்தது. விலையை உயர்த்திய பின்னரும் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. மேலும் சன் பார்மா, கோடக் வங்கி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவங்களின் பங்குகளும் சரிவை சந்தித்தன.


Share it if you like it