உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி !

உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி !

Share it if you like it

விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை என்ற கிராமத்தில் ஜெயபால் மகளான ஜெயஸ்ரீ என்ற சிறுமியை முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் தீவைத்து எரித்து கொன்றனர். அந்த குற்றவாளிகள் மீது திருவெண்ணைநல்லுர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தனது ஆழ்ந்த இரங்கல்களை உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it