ஊரடங்கை மீறி வாகனத்தில் வந்து காவல்துறையினரின் கைகளை கொடூரமாக வெட்டிய நிஹாங்ஸ்  !

ஊரடங்கை மீறி வாகனத்தில் வந்து காவல்துறையினரின் கைகளை கொடூரமாக வெட்டிய நிஹாங்ஸ் !

Share it if you like it

  • பஞ்சாபில் நெஞ்சு பதைபதைக்கும் ஒரு கொடூரமான நிகழ்வு நடந்துள்ளது. பஞ்சாபில் ஐந்து நிஹாங்ஸ் [ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள்] ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளை கொண்டு சுற்றி கொண்டிருந்தனர். பின் அவர்கள் பஞ்சாபின் பட்டியாலாவில் உள்ள சந்தைக்கு சென்றனர். அங்கு காவல் துறையினரால் வைக்கப்பட்டிருந்த பேரிகேட் மற்றும் தடுப்பு சுவர்களை வாகனத்தால் இடித்து தள்ளினர். அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர் காவல் துறையினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நிஹாங்ஸ் [ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள்] காவல் துறை அதிகாரி ஹர்ஜித் சிங் என்பவரின் கைகளை கொடூரமாக வாளால் வெட்டினார். மேலும் இரண்டு காவல் துறையினர் படுகாயமடைந்தனர். பின்னர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அந்த மூன்று காவலர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கை வெட்டப்பட்ட காவலருக்கு தற்போது அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. இந்த கொடூரமான தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/IKsPCEuxwPU


Share it if you like it