ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பும் மத்தியஅரசு

ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பும் மத்தியஅரசு

Share it if you like it

சரியாக பணியாற்றாத இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகளின் பட்டியலை அளிக்குமாறு அனைத்து அமைச்சகத்திற்கும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையானது கடிதம் அனுப்பியுள்ளது. இது மட்டுமின்றி நிதி ஆயோக் , சட்டத்துறை, விவசாயம் போன்ற துறைகளுக்கும் பட்டியலை வரும் 13 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கடிதம் அனுப்பியுள்ளது.

இதில் பெறப்படும் தகவல்கள் மூலம் தங்களது கடமையை சரியாக செய்யாத, இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர். இல்லையெனில் கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்படவுள்ளது. இந்த கடிதம் அரசுத்துறை உயர் அதிகாரிகளிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.


Share it if you like it