எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் தொடரும் தற்கொலைகள் – பல்கலை கழகமா – தற்கொலை கழகமா ?

எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் தொடரும் தற்கொலைகள் – பல்கலை கழகமா – தற்கொலை கழகமா ?

Share it if you like it

சென்னை பொத்தேரியில் உள்ள SRM பல்கலை கழக விடுதியில் பயோ டெக்னாலஜி இரண்டாமாண்டு படிக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆயுஷிரானா என்ற மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பல்கலை கழக மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில நாட்களுக்கு முன் இதே பல்கலை கழகத்தில் திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த அனுப்பிரியா, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனிஷ்சவுத்ரி, கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்ரீ ராகவ் என மூன்று பேர் பல்கலை கழக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பல்கலை கழகத்தில் தொடர் தற்கொலைக்கு காரணம் என்ன ? மேலும் இதுகுறித்து பல்கலை கழக மேலாளர் வாய் திறக்காமல் இருப்பது ஏன் ? என பல கேள்வி கணைகளை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.

 


Share it if you like it