ஏமா மம்தா, ஏயா பினராயி, எங்க குடும்பத்தை நாங்க பாக்கணும்யா உதவி பண்ணுங்க சாமி !

ஏமா மம்தா, ஏயா பினராயி, எங்க குடும்பத்தை நாங்க பாக்கணும்யா உதவி பண்ணுங்க சாமி !

Share it if you like it

  • மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிழைப்பை தேடி கேரளாவில் வேலை செய்து வந்துள்ளனர். கொரோனா நோய் தொற்றினால், அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் பேருந்து. ரயில், விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. திருவனந்தபுரம் நகரில் உள்ள சலாயில் உள்ள அரசு சிறுவர் பள்ளியில் 81 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். அனைவரும் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பல்வேறு துறைகளில் தொழிலாளர்களாக பணிபுரிந்த அவர்கள், அருகிலுள்ள சாலாய் மார்க்கெட்டுக்குள் வாடகை அறைகளில் வசித்து வந்தனர். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு, கோவிட் -19 நிலைமை மோசமாகிவிட்டதால் அவர்கள் பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இதனால் கேரளாவில் வசித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தன் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
  • கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது, மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். ஆனால் நாங்கள் எங்கள் வீட்டிற்கு செல்ல நினைக்கிறோம். எங்கள் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை. கேரளா அரசும் வங்காள அரசும் எங்களை அழைத்து செல்வதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
  • என்ன கொரோனா வைரஸ் ? இது நோய் தொற்று ஏழை மக்களை மட்டுமே பாதிக்கிறதா, பணக்காரர்களை பாதிப்பதில்லையா ? நாங்கள் குறைந்த பணத்தில் வாழ்கிறோம், எங்களுக்கு வேலை இல்லை, வீட்டிற்கு அனுப்ப எங்களிடம் பணம் இல்லை, எனவே எங்கள் குடும்பங்களுக்கு பணம் இல்லை. இந்த துன்ப காலத்தில் நாங்கள் அனைவரும் எங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்க விரும்புகிறோம்.
  • பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு அந்த மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் கேரளா, மேற்கு வங்கத்தில் மட்டும் எந்த நடவடிக்கையையும் எடுக்க மறுக்கின்றனர்.
  • கேரளா அரசும், மேற்கு வங்க அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நாங்கள் நடந்தே எங்கள் சொந்த ஊருக்கு செல்வோம். போகும் வழியில் இறந்து போனாலும் பரவாயில்லை என்று கண்ணீர் மல்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூறினர்.


Share it if you like it