ஐம்பொன் சிலைகள் திருட்டு – மீட்க தீவிரம் காட்டுமா காவல்துறை ?

ஐம்பொன் சிலைகள் திருட்டு – மீட்க தீவிரம் காட்டுமா காவல்துறை ?

Share it if you like it

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொண்டல் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவில் உற்சவத்தின்போது வீதியுலாவில் முருகன் வள்ளி,தெய்வானை,விநாயகர்,சண்டிகேஸ்வரர்,ஐயப்பன், இடும்பன் ஆகிய சிலைகள் வைக்கப்பட்டது. அடுத்தநாள் காலை கோவில் குருக்கலான நடராஜ் கோவிலை திறக்கும்போது ஐம்பொன் சிலையாலான முருகன் வள்ளி தெய்வானை ஆகிய மூன்று சிலைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர். மூன்று சிலைகளின் எடைகளும் சேர்த்து சுமார் 100 கிலோ எடை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it