”ஒன்றிணைவோம் வா” என்று கூறிய பின்பே..! கொரோனா எண்ணிக்கை கூடியுள்ளது- பாஜக மாநில செயலாளர் ஸ்டாலின் மீது கடும் தாக்கு!

”ஒன்றிணைவோம் வா” என்று கூறிய பின்பே..! கொரோனா எண்ணிக்கை கூடியுள்ளது- பாஜக மாநில செயலாளர் ஸ்டாலின் மீது கடும் தாக்கு!

Share it if you like it

”ஒன்றிணைவோம் வா” என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விடுத்த அழைப்பினை ஏற்று, உயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும் என்பதை மறைத்து, கொரோனா நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், மலை குலைந்தாலும் நிலை குலையாத மாவீரன் ஜெ. அன்பழகன் என  அண்மையில் வைகோ குழப்பமான அறிக்கையை வெளியிட்டு திமுக கட்சியை ஆட்டம் காண செய்திருந்தார். அதே போல் மூத்த பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.

ஒன்றிணைவோம் வா” என்று ஒவ்வாத வசனம் பேசிய, ஒரு கோமாளித் தலைமையின் கூறு கெட்ட வழிகாட்டுதலுக்கு கொடுக்கப்பட்ட விலை, கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பலி. பரிதாபத்திற்குரிய உயிருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். MKSசொன்னாரு_MLAவகொன்னாரு.

இந்நிலையில் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்

வீட்டில் இரு, விலகி இரு என்று தமிழக முதல்வர் சொன்ன போது, தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. ஒன்றிணைவோம் வா என்ற திமுக சொன்ன பின்பு கொரோனா எண்ணிக்கை கூடியிருக்கிறது. ராசியான கட்சி தான் திமுக.

 


Share it if you like it