’ஓசி’யில் தர மறுத்த இஸ்லாமியர், பிரியாணி அண்டாவோடு மாயமான கழக கண்மணிகள்..!

’ஓசி’யில் தர மறுத்த இஸ்லாமியர், பிரியாணி அண்டாவோடு மாயமான கழக கண்மணிகள்..!

Share it if you like it

பஜ்ஜீ கடை, சுண்டல் கடை, தேங்காய்கடை, கடப்பா கல், பிச்சைக்கார், என்று உடன் பிறப்புக்கள் இன்று ஒரு தகவல் போல், தினம் ஒரு சேட்டை செய்து கழகத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை, தொடர்ந்து காத்து வருவது அனைவரும் அறிந்ததே. தி.மு.க உறுப்பினர் ஒருவர் பிரியாணி கேட்டு, ஓட்டல் ஊழியர்களிடம் பாக்ஸிங் போட்ட சம்பவத்தை இன்று வரை தமிழக மக்கள் யாரும் மறக்கவில்லை என்பது நிதர்சனம்.

பிரியாணியில் ’லெக் பீஸ்’ இல்லாத காரணத்தினால்., தி.மு.க-வின் பரம விரோதியான சி.சி.டி.வியை கவனிக்காமல்., கழக கண்மணி ஒருவர் அண்மையில் ஓட்டலில் செய்த சேட்டைகள் அடங்குவதற்குள். உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் பிரியாணி அண்டாவை தி.மு.க-வினர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it