ஓவைசி மீது வழக்கு பதிவு

ஓவைசி மீது வழக்கு பதிவு

Share it if you like it

அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த, அசாதுதின் ஓவைசி, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தாம் உடன்படவில்லை, எங்களுக்கு நமது அரசியலமைப்பில் முழு நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து போராடுவோம். ஐந்து ஏக்கர் நிலம் நன்கொடை எங்களுக்கு தேவையில்லை. உச்சநீதிமன்றம் வழங்க கூறிய ஐந்து ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும் என்று ஓவைசி கூறியிருந்தார்.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கறிஞர் பவன்குமார் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் ஓவைசி பேசுவதாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் அசாதுதின் ஓவைசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


Share it if you like it