கனிமொழியை தொடர்ந்து ஸ்டாலின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்  ஊர்மக்கள்..!

கனிமொழியை தொடர்ந்து ஸ்டாலின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்  ஊர்மக்கள்..!

Share it if you like it

ஹிந்துக்களை ஏமாற்ற தி.மு.க.வின் எம்.பி. கனிமொழி அவர்கள் அண்மையில் (28.12.2020) இராஜபாளையத்தில் அரசியல் சம்மந்தப்பட்ட விஷயமாக குறிப்பிட்ட இடத்தில் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தனர் தி.மு.க நிர்வாகிகள்…

இதற்கு அவ்வூர் மக்கள் உட்பட பல இளைஞர்கள் கனிமொழி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இவ்வாறு கூறி இருந்தனர்..

பொது சாவடி பல முன்னோர்கள், ஆன்மீக பெரியோர்களால், பாரம்பரியமாக பொது நலத்துடன் செயல்பட்டு வருகிறது.. அதை தயவு செய்து இங்கு அரசியல் கட்சிக்காரர்களை அனுமதித்து கலங்கப்படுத்தி விடாதீர்கள்..

பொது சாவடிக்குள் அரசியல் சம்மந்தப்பட்ட எந்தவொரு நிகழ்ச்சிகளை செய்ய அனுமதிக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து ஹிந்துக்களை இழிவுப்படுத்தும் கனிமொழியின் வருகையை தாங்கள் எதிர்ப்பதாக அவ்வூர் மக்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்..

கோவையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில்..  பெண் ஒருவர் மிக கடுமையாக தாக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது… இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதாக செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது..

இதற்கு அம்மாவட்ட பெண்கள் தி.மு.க தலைவர் வருகைக்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it