கவர்னர் உரையுடன் தொடங்கியது முதல் (2020) கூட்டத்தொடர்!

கவர்னர் உரையுடன் தொடங்கியது முதல் (2020) கூட்டத்தொடர்!

Share it if you like it

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

அதில்  அவர் தமிழக அரசு நிறைவேற்றிய திட்டம் மற்றும் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார். இதில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில், மத்திய அரசை வலியுறுத்துவேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல்  கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின்  கூட்டம் வெளிநடப்பு செய்தனர்.

 


Share it if you like it