காப்பி கேட்ட துரைமுருகன் –  உதயநிதிக்கு ’ஐஸ்’ வைக்கும் MLA-க்கள்..! முதல்வருக்கு ’ஐஸ்’ வைக்கும் புதல்வர் சட்டமன்றமா கேளிக்கை மன்றமா? 

காப்பி கேட்ட துரைமுருகன் –  உதயநிதிக்கு ’ஐஸ்’ வைக்கும் MLA-க்கள்..! முதல்வருக்கு ’ஐஸ்’ வைக்கும் புதல்வர் சட்டமன்றமா கேளிக்கை மன்றமா? 

Share it if you like it

காமராஜர், பசும்பொன், கக்கன், போன்ற மூத்த முன்னோடிகள் மக்கள் பிரச்சனைகளை தங்களுடையதாக நினைத்து, அவர்களுக்கு தேவையான பணிகளை திறம்பட செய்து மக்களிடம் நற்பெயரை பெற்ற  தீர்வு கூடமாக  திகழ்ந்த சட்டமன்றம்.

இன்று கேலி கூத்தான மன்றமாக மாறி வருது மக்கள் மத்தியில் அதிர்ச்சியில் கவலையையும் வேதனையும் ஏற்படுத்தி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

முன்னாள் எதிர்க்கட்சியின் துனண தலைவராக இருந்த துரைமுருகன் அவர்கள் அப்பொழுதைய சபாநாயகரிடம் ஒர் சிறந்த கோரிக்கையை முன் வைத்தார். அது என்னவென்றால், கேண்டினில் கொடுக்கப்படும் காப்பி தண்ணீர் போல் உள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து பேசாமல் காப்பிக்கு அதிக  முக்கியத்துவம் கொடுப்பதாக என்று நெட்டிசன்கள் அந்நாட்களில் வறுத்தெடுத்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

இதனை தொடர்ந்து தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு அக்கட்சியின் MLA-க்கள் முண்டியடித்து கொண்டு உதயநிதிக்கு வணக்கம் வைப்பதும். ஒருபடி மேலே சென்று அமைச்சர்கள் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலினை புகழ்வதும்.  உதயநிதி தமிழக முதல்வருக்கு ஐஸ் வைக்கும் விதமாக புகழ்வதும் என்று சட்டமன்றத்தை கேலி மன்றமாக மாற்றி வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Image


Share it if you like it