கிங்ஸ் லெவனுக்கு ராகுல் கேப்டன்.!

கிங்ஸ் லெவனுக்கு ராகுல் கேப்டன்.!

Share it if you like it

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றது.  இதில் பல்வேறு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கடந்த இரு சீசன்களாக கேப்டனாக இருந்த அஷ்வின் டெல்லி அணிக்கு மாறியதால் தற்போது ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கூறிய கிங்ஸ் லெவன் அணி துணை உரிமையாளர் நெஸ் வாடியா ” ராகுல் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி அவர் சிறந்த கேப்டனும் கூட அணிநிர்வாகத்தினர் அனைவரும் அவரை ஒருமனதாக கேப்டனாக நியமித்துள்ளோம். அவரின் தலைமையில் அணி பல்வேறு வெற்றி பெரும்” என நம்பிக்கை தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேட் சம்மின்ஸை அதிக விலை கொடுத்து கொல்கத்தா நைட் அணி வாங்கியுள்ளது.


Share it if you like it