குழந்தைகளையும் விட்டு வைக்காத சீன கொடூங்கோல் கம்யூனிஸ்ட் அரசு…!

குழந்தைகளையும் விட்டு வைக்காத சீன கொடூங்கோல் கம்யூனிஸ்ட் அரசு…!

Share it if you like it

சீனாவில் மூச்சு விடும் சுதந்திரம் தவிர எழுத்து சுதந்திரமோ,, பேச்சு சுதந்திரமோ, முற்றிலும் கிடையாது என்பது மிகவும் கசப்பான உண்மை. இன்று வரை சீன மக்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

முன்னாள் கால்பந்து வீரர் ஹாவ் ஹைடோங்

சீனாவின் முன்னாள் கால் பந்து வீரரும், சீன மக்களால் பெரிதும் நேசிக்கப்படுபவருமான ஹாவ் ஹைடோங் ஜின்பிங் அரசாங்கத்தையும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியையும் மனித குலத்திலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்று தனது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தார்..

அப்பாவி மக்கள் உடல் உறுப்புகளுக்காகவே கொடூரமாக கொல்லப்பட்டு. அவர்களின் உறுப்புகள் விற்கப்படுகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறை கைதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஊடகங்களில் என்னை பேச கூட அனுமதிப்பது இல்லை என்று முன்னாள் சீன மாடல் அழகி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு காணொலி தற்பொழுது இணைய தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் குழந்தைகளின் உடல் உறுப்புகளை கூட திருடியுள்ளனர் மனித தன்மையற்ற மிருகங்கள். இது 2018 அல்லது அதற்கு முன் சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது. இன்றும் சீனாவில் இது போன்ற கொடூர சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. புள்ளிவிவரங்களின்படி ’சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் 200,000 குழந்தைகள் காணாமல் போவதாக கூறப்படுகிறது.

https://twitter.com/UNNTV1/status/1286339020755292168


Share it if you like it