கேரளாவில் விஷ்ணு சிலை உடைப்பு  – நடவடிக்கை எடுக்குமா காவல் துறை ?

கேரளாவில் விஷ்ணு சிலை உடைப்பு – நடவடிக்கை எடுக்குமா காவல் துறை ?

Share it if you like it

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஹிந்து மக்களுக்கு எதிராக பல கொடுமைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நெஞ்சை பதைபதைக்கும் அளவுக்கு ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு அருகே அயினிக்கட்டு மஹாவிஷ்ணு கோவிலில் பக்தர்கள் வணங்கும் தெய்வமான விஷ்ணு சிலையை மர்ம நபர்கள் உடைத்து ஒரு மூலையில் வீசியுள்ளனர். இதுகுறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. காவல் துறையும் என்ன நடந்தால் நமக்கென்ன என்று மெத்தன போக்கை கொண்டுள்ளது. இதனை புகைப்படம் எடுத்த ஒரு நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it