கொரோனாவுக்காக மருத்துவர்கள் சொல்வதை கேட்டால், நமாஸ் செய்வதை நிறுத்திவிடுங்கள்- தப்லீஹி ஜமாஅத்தின் தலைவர் மௌலானா சாத் வன்முறை பேச்சு !

கொரோனாவுக்காக மருத்துவர்கள் சொல்வதை கேட்டால், நமாஸ் செய்வதை நிறுத்திவிடுங்கள்- தப்லீஹி ஜமாஅத்தின் தலைவர் மௌலானா சாத் வன்முறை பேச்சு !

Share it if you like it

  • நிஜாமுதீன் மார்க்கஸிடமிருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் ஆடியோ கிளிப் தற்போது வெளிவந்துள்ளது. அதில் தப்லீஹி ஜமாஅத்தின் தலைவர் மௌலானா சாத் பேசியுள்ளார். அந்த ஆடியோ 2020 மார்ச் 23 அன்று நிஜாமுதீன் மார்க்கஸில் பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு ஒரு நாள் முன்பு இதை பதிவு செய்துள்ளார்கள்.
  • அந்த ஆடியோவில், இது மசூதிகளை நிரப்ப வேண்டிய நேரம் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மசூதிகளை காலி செய்யும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம். உண்மையில், இது மசூதிகளை அதிகரிக்கும் நேரம். அல்லாவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த திட்டத்தின் மூலம் முஸ்லிம்களை காப்பாற்ற முயற்சிக்கும் சாக்குகள் மூலம் எங்களை விலக்கி வைக்க முயற்சிக்கின்றனர். மசூதிகளில் முஸ்லிம்கள் வருவதை தடுப்பதற்கு இவர்கள் ஒரு வழி கண்டுபிடித்துள்ளார்கள். அந்த வழிதான் இந்த கொரோனா வைரஸ். முஸ்லிம்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்கும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பையும் சகோதரத்துவத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இது ஒரு தந்திரமாகும். இந்த திட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று தோன்றுவதற்காக உருவாக்கப்பட்டது. தொற்றுநோய் இருப்பவர்களிடமிருந்து விலகி இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் முஸ்லிம்களை சந்திக்கக் கூடாதா? இது ‘ஜிஹலத்‘என்று கூறுகிறார்.
  • அவர் பேசும்பொழுது நடுவே இருமல் சத்தங்கள் வந்துகொண்டிருக்கிறது. மேலும் இது முஸ்லிம்களைச் சேகரித்து வர வேண்டிய நேரம். அல்லாஹ்வின் சீஷர்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். மசூதிகளை விட்டுவிட்டு கலைந்து செல்ல இது நேரம் அல்ல. மசூதியில் ஒன்று கூடுவது கொரோனா வைரஸை பரப்பும் என்று முஸ்லிம்கள் ஏன் நம்பினார்கள்? நாம் ஒன்றிணைந்தால் அல்லாஹ் தேவதூதர்களை அனுப்புவான். தேவதூதர்களின் உதவியுடன் உலகிற்கு அமைதி திரும்பும் என்று மக்கள் ஏன் நம்பவில்லை.
  • மரணம் உங்களுக்கு முன்னால் நடக்கிறது. “குர்ஆனில் அல்லாஹ் மரணத்தை நமக்கு முன்னால் வைத்திருக்கிறான். மரணம் உங்களுக்கு முன்னால் உள்ளது. மரணத்திலிருந்து நீங்கள் ஓட முடியாது. எனவே இதுபோன்ற நேரத்தில் உங்கள் தலையை குளிர்ச்சியாக வைத்திருங்கள். அல்லாஹ்விடம் கேளுங்கள். “இந்த நேரத்தில் நீங்கள் ஓடிவிட்டால், அல்லாஹ் கோபப்படுவான்.
  • அவர் மேலும் ஜமாதிகளை டாக்டர்களுக்கு செவிசாய்க்க வேண்டாம். நீங்கள் மருத்துவர்கள் சொல்வதை கேட்க ஆரம்பித்துவிட்டால், நமாஸ் செய்வதை நிறுத்திவிடுங்கள். நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், 70,000 தேவதூதர்களிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் ஏன் தேவதூதர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை? 70,000 தேவதூதர்களால் உங்களை காப்பாற்ற முடியாவிட்டால் மருத்துவரிடம் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நீங்கள் எவ்வாறு குணப்படுவீர்கள்? விலகி விலகி பயப்பட வேண்டிய நேரம் இதுவல்ல.
    இவ்வாறு அந்த ஆடியோவில் தப்லீஹி ஜமாஅத்தின் தலைவர் மௌலானா சாத் கூறியுள்ளார்.
  • பிரதமர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என இரவு பகல் பாராமல் கொரோனா நோய் தொற்றை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமிய சமூகத்தின் ஒரு தலைவர் இவ்வாறு பேசுவது கண்டனத்திற்குரியது. மேலும் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மூலம் தான் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதுபோன்ற ஒரு நெருக்கடியான காலகட்டங்களில் வீட்டில் உள்ள முஸ்லிகளை வெளியில் வந்து கொரோனா வைரஸை பாதிக்கும்பொருட்டு அவர்களை தூண்டும் வகையில் பேசியுள்ளார். மேலும் இவ்வாறு பேசிய தப்லீகி ஜமாத்தின் தலைவரான மௌலானா சாத் அரசுக்கு பயந்து தலைமறைவாக உள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்காக காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it