கொரோனாவை எதிர்கொள்ள நன்கொடை அளித்த திரை பிரபலங்கள் !

கொரோனாவை எதிர்கொள்ள நன்கொடை அளித்த திரை பிரபலங்கள் !

Share it if you like it

கோவிட் -19 தொற்றுநோய் உலகை மிரட்டி வருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் கூட இந்த கொடிய நோய் பரவுகின்ற வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடுகின்றன. தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களுக்கு தேவைப்படும் முகமூடிகள், சானிடைசர்கள் போன்ற அடிப்படை மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை உள்ளது. எனவே அரசும் கொரோனாவை எதிர்த்து போராட மக்கள் தங்களால் முடிந்த நிதியை அளிக்க உதவி வேண்டியது. அரசின் வேண்டுகோளை ஏற்று திரை பிரபலங்கள் பலர் நிதி அளித்துள்ளனர்.

ஹிருத்திக் ரோஷன் : மும்பை மாநகராட்சி தொழிலாளர்கள் மற்றும் பிற தூய்மை பணியாளர்களுக்கு N95, FFP3 வகை முக கவசங்களை வழங்குவதாக கூறியுள்ளார்.

ஹேமா மாலினி : மூத்த நடிகை, மதுராவைச் சேர்ந்த பாஜக எம்.பி.யுமான ஹேமா மாலினி, வைரஸை எதிர்ப்பதற்காக எம்.பி.எல்.ஏ.டி.எஸ் (நாடாளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் உறுப்பினர்கள்) நிதியில் இருந்து ரூ .1 கோடியை அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தென் திரையுலகின் தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சத்தை அளித்துள்ளார்.

பிரபாஸ் : பாகுபலி என்ற படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் என்ற நடிகர் கொரோனா நிதிக்காக ரூ.4 கோடி அளித்துள்ளார்.

பவன் கல்யாண் : நடிகர் மற்றும் ஜனசேனா கட்சியின் உறுப்பினரான பவன் கல்யாண் கொரோனா நிதிக்காக ரூ.1 கோடி அளித்துள்ளார்.

ராம் சரண் : தெலுங்கு சினிமா நட்சத்திரமான ராம் சரண் கொரோனா நிதிக்காக ரூ.70 லட்சம் வழங்கியுள்ளார்.

கபில் சர்மா : நகைச்சுவை நடிகரான கபில் சர்மா கொரோனா நிதிக்காக ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.

சிவ கார்த்திகேயன் : கொரோனா நிதிக்காக ரூ.10 லட்சம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி : கொரோனா நிதிக்காக ரூ.10 லட்சம் அளித்துள்ளார்.


Share it if you like it