கொரோனா எதிரொலி..! மோடியிடம் இலங்கை அதிபர் கடனுதவி செய்யுமாறு வேண்டுகோள்!

கொரோனா எதிரொலி..! மோடியிடம் இலங்கை அதிபர் கடனுதவி செய்யுமாறு வேண்டுகோள்!

Share it if you like it

இந்தியா அண்டை நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், போன்றவை ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு அந்நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள், அனைவரும் மத்திய அரசிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அண்மையில் பாரதப் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு. கொரானோவினால் தங்கள் நாடு கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்துள்ளதால், இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கும் எங்கள் நாட்டிற்கு 110 கோடி அமெரிக்க டாலர் கடனாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் இலங்கை அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். என்னால் இயன்ற உதவியை எனது அண்டை நாட்டுக்கு உதவ கடமைப்பட்டுள்ளேன் என்று மோடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it