கொரோனா நிவாரண நிதியாக மேலும் ரூ.2 கோடி வழங்கிய பாலிவுட் நடிகர் அக்சய்குமார் !

கொரோனா நிவாரண நிதியாக மேலும் ரூ.2 கோடி வழங்கிய பாலிவுட் நடிகர் அக்சய்குமார் !

Share it if you like it

  • மக்களை பாதுகாப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் தங்கள் உயிரை பணயம் வைத்துள்ள இந்த இக்கட்டான சமயத்தில் மும்பை தலைமை காவலரான சந்திரகாந்த் மற்றும் சந்தீப் ஆகியோரின் மரணத்தை தொடர்ந்து மும்பை காவல் துறை அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ.2 கோடி அளித்துள்ளார்.
  • மும்பை காவல்துறை அறக்கட்டளையும் அக்சய் குமாருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.

  • இதற்கு பதிலளித்த அக்சய் குமார், இறந்துபோன காவல் துறையினரை நான் வணங்குகிறேன். நான் என் கடமையை தான் செய்தேன். நீங்களும் உங்கள் கடமையை செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக அக்சய் குமார் மத்திய அரசின் பிஎம் கேர் பண்டிற்கு ரூ.25 கோடியும், மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடியும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it