கொள்ளை போகும் கோவில் சிலைகள் – நடவடிக்கை எடுக்காத ஒடிசா அரசு !

கொள்ளை போகும் கோவில் சிலைகள் – நடவடிக்கை எடுக்காத ஒடிசா அரசு !

Share it if you like it

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் கோவில்களில் சிலைகள் திருடப்படுவதும்,அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300 பழங்கால சிலைகள் மாயமாகியுள்ளன.சிலைகள் மாயமானதாக,பிராச்சி பள்ளத்தாக்கு பகுதி காவல் நிலையங்களில்,கடந்த 10 ஆண்டுகளில் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் ஒன்றில் மட்டுமே குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற வழக்குகளில் மீட்கப்படும் சிலைகள், அவை இருந்த இடத்திற்கு சேராமல்,காவல் நிலையங்களிலும்,தொல்பொருள் துறையின் கிடங்குகளிலும் வைக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.


Share it if you like it