கோவிலில் இங்கிலாந்து பிரதமர் சாமிதரிசனம்

கோவிலில் இங்கிலாந்து பிரதமர் சாமிதரிசனம்

Share it if you like it

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மனைவி கேரி சைமண்ட்ஸும் லண்டனில் உள்ள பிரபலமான சுவாமி நாராயணா கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர். இங்கிலாந்தில் வரும் 12 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஜான்சன் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக பரப்புரையை தொடங்கிவிட்டார். அதன் ஒருபகுதியாக இங்கிலாந்து வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவர்வதற்காகவே ஜான்சன் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகின்றது. சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியர்களை சந்தித்த ஜான்சன் ”புதிய இந்தியாவை அந்நாட்டின் பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார், அது எனக்கு தெரியும். இந்திய பிரதமரின் இம்முயற்சிக்கு, பிரிட்டனில் ஆட்சியில் இருக்கும் எனது தலைமையிலான அரசு முழுமையாக ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்தார்.


Share it if you like it