சட்டப்பேரவையில் அமைச்சர் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடையே கடும் போட்டி..!  

சட்டப்பேரவையில் அமைச்சர் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடையே கடும் போட்டி..!  

Share it if you like it

தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல வாரிசு அரசியலுக்கு நாங்கள் எதிரி என்பது போல் அப்பொழுதைய தி.மு.க தலைவர் கலைஞர் கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதனை தொடர்ந்து ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பை வழங்கி அழகு பார்த்தவர் கலைஞர்.

என் குடும்பத்தில் இருந்து எனது மகனோ, மருமகனோ, யாரும் எனக்கு பிறகு அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கலைஞர் கூறிய வசனத்தை புதிய வடிவில் செதுக்கி கழக கண்மணிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் கூறினார் தற்பொழுதைய தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அதனை தொடர்ந்து உதயநிதிக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் பொறுப்பு மற்றும் கூடுதல் பொறுப்பாக திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு என தொடர்ந்து உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் இவ்வேளையில்.

அமைச்சர் எ.வ. வேலு, தி.மு.க எம்.எல்.ஏ இருவர் போட்டி போட்டு கொண்டு சட்டபையில் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசி சட்டமன்றத்தையே ஒரு  கேளிக்கை மன்றமாக மாற்றி விட்டதாகவும்.

வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான் என்று அமைச்சர் பெருமக்களும் மற்ற தி.மு.க எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று பாடி தமிழக முதல்வருக்கு காது குத்தி சட்ட சபையில் நடனம் ஆடி இருந்தால் தியாக தீபம் உதயநிதியின் மக்கள் சேவையை எண்ணி ஒட்டு மொத்த தமிழகளும் ஆனந்த கண்ணீர் வடித்து  இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Image

Image


Share it if you like it