சட்டம் தன் கடமையை செய்யும் என்றால் ஆபாச பேச்சாளர் மற்றும் ஆபாச கவிஞர் மீது எப்பொழுது நடவடிக்கை?

சட்டம் தன் கடமையை செய்யும் என்றால் ஆபாச பேச்சாளர் மற்றும் ஆபாச கவிஞர் மீது எப்பொழுது நடவடிக்கை?

Share it if you like it

பிரபல பின்னணி பாடகி சின்மயி., பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இச்செய்தி அந்நாட்களில் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது.

இன்று வரை வைரமுத்து மீது எந்த ஒரு நடவடிக்கையையும் முந்தைய அரசும் சரி தற்பொழுதுள்ள அரசும் சரி எடுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. தனது அரசியல் தொடர்புகள் மூலம் தொடர்ந்து ஆபாச கவிஞர் தப்பி வருவதாக அவர் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டினை சுமத்தி வருகின்றனர்.

அதே போன்று ஆபாச பேச்சாளர் சீமான் மீது பிரபல நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்த சம்பவத்தை இன்று வரை தமிழக மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது கடந்து செல்லவும் முடியாது என்பது திண்ணம்.

இந்நிலையில் பிரபல மாடல் மற்றும் திரைப்பட நடிகையுமான மீரா மிதுன் அண்மையில் பட்டியல் சமூக மக்களையும், திரை பிரபலங்களையும் விமர்சனம் செய்ததாக அவர் பலர் குற்றச்சாட்டினை சுமத்தினர். இதனை தொடர்ந்து தமிழக அரசு அவரை கைது செய்து தற்பொழுது சிறையில் அடைத்து உள்ளது.

சட்டம் தன் கடமையை செய்யும் என்றால், பிரபல ஆபாச பேச்சாளர் சீமான் மற்றும் ஆபாச கவிஞர் வைரமுத்துவை இன்று வரை ஏன்? கைது செய்யவில்லை பயமா? பாசமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

En Kadhala | Naatpadu Theral - 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan - YouTube

Image


Share it if you like it