சபரிமலை வழக்கு நீதிமன்ற அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை வழக்கு நீதிமன்ற அமர்வுக்கு மாற்றம்

Share it if you like it

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் மேல்முறையீடு வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என  உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வு வழக்கு விசாரணையை ஏழு நீதிபதிகள் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.


Share it if you like it